ஆனைமலை: புரட்டாசி முதல் சனிக்கிழமை ஒட்டி நந்தகோபால்சாமி மலையில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
அங்கலக்குறிச்சி அருகே அமைந்துள்ளது நந்தகோபால்சாமி மலை. கரடு முரடான பாதைகளை கடந்து சுமார் 1500 அடிக்கு மேல் உள்ள நந்த கோபால்சாமி மலையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஒரு சில நாட்களில் மட்டுமே இங்கு வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு. இந்நிலையில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்கள் மலை ஏற துவங்கினர். மலையேறி வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று நந்தகோபால்சாமி பாமா ருக்மணி தாயாரை வழிபாடு செய்தனர்.