திண்டுக்கல் மாநகராட்சி அண்ணா நினைவு தொடக்கப்பள்ளி மாணவ மாணவியருக்கு எழுது பலகைகள் சமூக ஆர்வலர்களால் வழங்கப்பட்டது. மேலும், இன்றைய தினம் திண்டுக்கல் மாநகராட்சி அண்ணா நினைவு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை முருகஜோதி மற்றும் ஆசிரியர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் பயின்று வரும் மாணவ மாணவிகள் 15 பேருக்கு எழுது பலகைகளை சமூக ஆர்வலர் பால்ஸ் தாமஸ் மற்றும் தன்னார்வலர் சுரேகா ஆகியோர் வழங்கினர்.