திண்டுக்கல் மாவட்டம் குமரன் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் இவர் இந்து மக்கள் கட்சி மாவட்ட தொண்டரணி தலைவராக செயல்பட்டு வருகிறார். மோகன் மற்றும் இவரது ஆதரவாளர்கள் குமரன் திரு நகர் பகுதியில் மூன்று தலைமுறைக்கும் மேல் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்கியதோடு தற்பொழுது இ பட்டா வழங்கப்படும் எனக் கூறி இவர்களிடம் உள்ள ஆவணங்களை பெற்றுச் சென்ற வருவாய்த் துறையினர். இ பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.