திண்டுக்கல், நத்தம்ரோடு குடகனாறு விருந்தினர் மாளிகை அருகே சாலையை கடக்க முயன்ற நத்தம்ரோடு, ரயில்வே காலனியை சேர்ந்த குருமூர்த்தி மனைவி கருப்பாயி மீது சரக்கு வேன் மோதி விபத்து. இந்த விபத்தில் கருப்பாயி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.