திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தெற்கு தெருவில் அமைந்துள்ள பழமையான கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்றது. முன்னோர்கள் நட்டு வைத்த அரிவாள்களை காவல் தெய்வமாக இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து கோவில் கோபுரங்கள் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் மண்டல அபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.