தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள சாலை வழியாக திரும்பிச் செல்கின்றன. இந்த சாலையில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையின் காரணமாக சாலை பழுதடைந்து குழி விழுந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.