திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பழைய வடக்கம்பட்டி, அழகர் நாயக்கம்பட்டி, சேடப்பட்டி, பழைய செம்பட்டி ஆகிய பகுதிகளில் 120க்கும் மேற்பட்டோர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். விவசாயக் கூலிகள் ஆகவும் தினக்கூலிகளாகவும் செல்லும் இவர்கள் மாதம்தோறும் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகை கொடுத்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டா கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.