திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு காமாட்சிபுரம் பகுதியில் புதியதாக திறக்கப்பட உள்ள அரசு டாஸ்மாக் கடை தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த கே ஆர் எஸ் ஏ குடியிருப்போர் உரிமையாளர் நல சங்கத்தின் சார்பாக 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். டாஸ்மாக் கடை அமையவிருக்கும் பகுதியில் கோவில் தேவாலயம் மசூதி பள்ளிக்கூடம் உள்ளிட்டவை அமைந்திருப்பதாக கூறி மனுவினை அளித்தனர்