திண்டுக்கல் மேற்கு: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 ஆண்டுகள், 1 மாதம் சிறை, ரூ.5000 அபராதம் திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்து 2024-ம் ஆண்டு காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த N.பஞ்சம்பட்டியை சேர்ந்த அருள்பிரசாத் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி, அருள்பிரசாத்துக்கு 15 ஆண்டுகள் 1 மாதம் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்