காளையார்கோவில்: செம்பனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு
மாட்டுவண்டி பந்தயம்- 48 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செம்பனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மேலும் 3 பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற உரிமையாளருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை சாலையில் இருபுறமும் ஏராளமானோர் நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர்.