மாவட்ட எஸ்பி.பிரதீப் மேற்பார்வையில் பேரில் அனைத்து உட்கோட்ட டிஎஸ்பி-கள் தலைமையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி வரை 8 நாட்களில் கொலை, திருட்டு, கொள்ளை, போக்சோ, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த 174 நீதிமன்ற பிடியானை குற்றவாளிகளை போலீசார் கைது செய்து நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.