திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அனைத்துத் தேர்வு மையங்களிலும் உள்ள தேர்வர்கள் அனைவரும் தேர்வினை நன்முறையில் எழுத, மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்தார்.