கொடைக்கானல் மலைப்பகுதியில் சமீபத்தில் காட்டு மாடுகள் மான் யானை சிறுத்தை புலி கருஞ்சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை குட்டி ஒன்று சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தது மேல்மலையில் குதிரையை புலி ஒன்று கடித்து தாக்கியது கருஞ்சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது இந்நிலையில் பேரிஜம் ஏரி சாலையில் புலி தனது குட்டியுடன் நடந்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது