மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், சிறுமலை வனச்சரக அலுவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அனுமதியின்றி சந்தன மரம் வெட்டிய வனராஜ் (35) மற்றும் கணேசன் (37) ஆகிய இருவரையும் கையும் களவுமாக போலீஸார் பிடித்தனர். இருவரும் அனுமதியின்றி சந்தன மரத்தை வெட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற ஆணையின் பேரில், 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருவரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்