சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மஹா சுதர்சன ஹோமம் மற்றும் சகஸ்ரநாம ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு 1000 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது பின்னர் அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு தங்க கிரீடம் மற்றும் தங்க கவசம் அணிவித்து சுவாமியின் திருமார்பில் பச்சை கற்பூர திருமாங்கல்யம், கஸ்தூரி திலகம், நாகாபர்ணம், ஒட்டியாணம், உடைவாள், அபய வைகுண்டஹஸ்தம்,அணிவித்து வடை மற்றும் ஜிலேபி மாலை அணிவித்து இராஜ அலங்காரம் செய்யப்பட்டது