வத்தலகுண்டு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நிலக்கோட்டை டிஎஸ்பி. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. பொங்கல் விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண், பெண் காவலர்கள் ஒரே மாதிரியான வேட்டி சட்டை, சேலைகள் அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.மேலும் ஆண் காவலர்கள், பெண் காவலர்கள் கயிறு இழுத்தல் போட்டி, மியூசிக் சேர் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன காவலர்களின் குழந்தைகளுக்கு மியூசிக் சேர், கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது