திண்டுக்கல்லில் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அபிராமிஅம்மன் திருக்கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு காலை கந்தக்கோட்டம் முருகன் கோவிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வழியாக 108 பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை கோவில் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அபிராமி அந்தாதி பாராயணம் செய்தனர். நெல்லிக்கனி, பிரசாதமாக வழங்கப்பட்டது