திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் வீரமணி, துணை முதல்வர் பேராசிரியர் சலீம், மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் சுரேஸ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, காசநோய் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் முத்து பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.