திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருக்கல்யாணம் கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது. இதனை அடுத்து இன்று மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து மஞ்சள் நீராடினர்.