திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாலை 5 மணி அளவில் 100க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அதில் கலந்து கொண்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது.