திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி இணையம் வழியில் பணம் பறிக்கும் சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன. டெலிகிராம் செயலி மூலமாக ஆன்லைனில் பகுதிநேரம் வேலை செய்யலாம் எனக்கூறி அறிமுகமாகும் மோசடி நபர்கள், ஓட்டல்கள், தனியார் இணையதள பக்கங்கள், விற்பனை செயலிகள், விடுதிகள் உள்ளிட்டவற்றுக்கு 5 நட்சத்திர ரேட்டிங் வழங்கி அதை ஸ்கீரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் உடனடியாக யு.பி.ஐ., செயலி மூலம் ரூ.150 சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி வலைவிரிக்கின்றனர்.