திண்டுக்கல் கிழக்கு: கொட்டபட்டி அருகே கூலித்தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்த வாலிபர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி தாஸ் என்பவர் கொட்டபட்டி பொன்னுமாந்துறை ரோடு ஆலங்குளகரை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த நல்லேந்திரபுரத்தைச் சேர்ந்த அன்பழகன்(எ) காடு என்பவர் தாஸின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.1000 பணத்தை பறித்து சென்றது தொடர்பாக தாஸ் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அன்பழகன் (எ) காடு-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்