திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், புனித மரியன்னை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் மாநில முழுவதும் இருந்து 12 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் 12 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி அணி, கோயம்புத்தூர் பயணியர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.