நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றிய குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டியும், கனமழையால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் தவிக்கும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்கு அனைத்து ஊராட்சிகளிலும் உடனே 100 நாள் வேலையை துவக்கிட வேண்டும் என வலியுறுத்தியும், கோவில் இடம் புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் அன