நகர் பகுதியில் தொடர்ச்சியாக இருசக்கரவாகன திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பான சிசிடிவி பதிவுகள் வைரலானது. இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் தொடர்பாக நகர் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது குறித்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பேட்டைரோடு சிவபெருமாள் நகரை சேர்ந்த முத்துவேல், முத்தழகுப்பட்டியை சேர்ந்த செபாஸ்டின் ஜான்சன்பிரபு ஆகிய 2 பேர் கைது