திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே எம் ஜி ஆர் சிலை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் மாவட்டத் தலைவர் முபாரக் தலைமையில் ஈடுபட்டனர். தமிழக அரசு கடந்த தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை அரசு ஊழியர்களுக்கு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இன்று ஒரு நாள் தங்களது பணிகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.