திண்டுக்கல் மேற்கு: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை ரூ.10,000 அபராதம் திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குஜிலியம்பாறை சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி அவர்கள் குற்றவாளி முருகேசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்