கொடைக்கானல் ஐந்து வீடு அருவிக்கு கடந்த சனிக்கிழமை பொள்ளாச்சியில் இருந்து 11நண்பர்கள் குளிக்கச் சென்ற நிலையில் நந்தகுமார் வயது 21 என்ற மாணவன் நீரில் மூழ்கி மாயமானார் நீரில் மூழ்கிய மாணவனை தேடும்பணியில் கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதியில் இருந்து 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என 50 -க்கும் மேற்பட்டவர்கள் தேடிவந்த நிலையில் அருவிப் பகுதியில் நந்தகுமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது உடலை அருவி பகுதியில் இருந்து மேலே கட்டி தூக்கி வந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்