தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி தொடக்கப் பள்ளியில் பயிலும் 20 மாணவர்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் தனது சொந்தச் செலவில் விமான மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்றிருந்தார். சென்னையில் பல்வேறு இடங்களை பார்த்துவிட்டு ரயில் மூலம் மாணவர்கள் தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.