திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வனத்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை உட்பட 50க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்காக ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கரும்புகளாலும் தோரண வாயில்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் கும்மியாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், சிலம்பம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டது.