எண்ணூர் எம் எஃப் எல் சந்திப்பில் இன்று போக்குவரத்து ஆய்வாளர் சந்திரமௌலி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அசன் என்பவர் ரேஷன் அரிசி இரண்டு டன் கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து அவரை கைது செய்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டனர் அவர்கள் அசனை கைது செய்து இரண்டு டன் அரிசியை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.