அரியலூர்: நகரிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் முன்பு தேர்தல் குறித்த விழிப்புணர்வு- நகராட்சி ஆணையர் பங்கேற்பு
அரியலூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது. இதனையொட்டி அரியலூர் நகரிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் முன்பு தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரச்சுரங்களை முஸ்லீம் மக்களுக்கு வழங்கினார்.