சிறுமலை மலைப்பகுதியில் 20க்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. மலைப்பகுதியில் விளையும் மிளகு, வாழை,சௌசௌ, மா உள்ளிட்ட காய்கறி,பழங்களை ஊருக்குள் எடுத்து வர குதிரைகளை பயன்படுத்துகின்றனர். விவசாயிகளின் நண்பனாக இருக்கக்கூடிய குதிரைகளை கௌரவப்படுத்தும் விதமாக மாட்டு பொங்கலையொட்டி மலைப்பகுதியில் குதிரை பொங்கல் கொண்டாடப்பட்டது