வேடசந்தூர்: அய்யலூர் ஆட்டு சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 கோடி வரை ஆடு கோழிகள் விற்பனை
அய்யலுாரில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் இன்று ஏராளமான ஆடு, கோழி, பந்தய சேவல்களை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இப்பகுதியில் லேசான மழை பெய்தபோதிலும் அதிகாலை 3:00 மணிக்கு துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து காலை 9:00 மணிக்குள் முடிந்தது. சந்தை வளாகம் மட்டுமின்றி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டிலும் விற்பனை நடந்ததால் நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. தீபாவளிபண்டிகையின் காரணமாக ஆடு கோழிகள் நல்ல விலைக்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி.