அரியலூர்: திருமானூரில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளர் வாக்குசேகரிப்பு
அரியலூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் சந்திரகாசன் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நெத்தியடி நாகையன் இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து எடுத்து கூறினார். இதில் திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.