கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சம்பத்குமார்(47), ஸ்டாலின்(25), நாமக்கல்லை சேர்ந்த கண்ணகி(54) அவரது மகன் கார்த்திக்(30) ஆகிய 4 பேரும் ஓசூரிலிருந்து காரில் திருத்தணி அருகே நல்லாட்டூரில் உறவினர் வீட்டில் இறுதி சடங்கில் பங்கேற்க வந்திருந்தனர். ஓசூருக்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்த போது திருத்தணியிலிருந்து ஆர்.கே.பேட்டை செல்லும் சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் எஸ்.பி.கண்டிகை பகுதியில் வேகமாக சென்ற கார் புளிய மரத்தில் மோதி மூன்று பேர் பலியான சோகம்