கொரோனா பேரிடர் காலத்தில் சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் ரயில் கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற நிலையில் அதற்குப் பின் நின்று செல்லவில்லை. இந்நிலையில் சென்னை குருவாயூர் ரயில் கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் கோரிக்கை வைத்தார் இந்நிலையில் வரும் 31ஆம் தேதி முதல் சென்னை குருவாயூர் ரயில் கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.