தூத்துக்குடி: ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் ராயல் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மின் மோட்டார்கள் இயங்காதால் தண்ணீர் வெளியேறுவதில் தாமதம்
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் காரணமாக பலத்த மழை பெய்தது ஏற்கனவே பெய்த மழையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த புயல் காரணமாக இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக மேலும் மழைநீர் தேங்கி பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.