காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வாரத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.த.ரா செந்தில் ஆகியோர் உள்ளனர்.