திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த வர்கீஸ் என்பவரை நகர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வர்கீஸ் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 13 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நகர் வடக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் எர்ணாகுளத்தில் பதுங்கியிருந்த வர்கீஸை கைது செய்தனர்