தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் திண்டுக்கல் ரயில்வே நிலையத்திற்கு வருகை புரிந்தார். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் புதிய கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். பின்பு புதிதாக கட்டப்படும் தோரண நுழைவு வாயில், நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகன காப்பகங்கள், ரயில் நிலைய முகப்பு கட்டிடம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்