திருவள்ளூர் சக்தி நகர் லஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி நிற்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் சமைக்கவோ, தூங்கவோ இடமின்றி தவிப்பதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் முறையான மழைநீர் வடிகால்வாய் அமைத்து தரக்கோரி அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.