திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 பெண்கள் 60 ஆண்கள் என மொத்தம் 80 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர் கோரிக்கைகளுக்கு செவிசாய் காவிடில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.