திருவள்ளூர்: சிறுவானூர் கண்டிகையில் கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் ஜோதி நகரைச் சேர்ந்தவர் பலராமன் மனைவி கலாவதி (62). இவர்களது மகன் முருகனுக்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனியாக திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் கண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்  வெங்கடேசன் வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக இன்று காலை வீட்டில் வந்து பார்த்த போது தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.