திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள மைதானத்தில் கலைஞர் கைவினைக் திட்டம் மண்டல அளவிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வரவேற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி 1,595 கோடி மதிப்பீட்டில் 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.