பழனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சரவணமுத்து, முத்துக்குமார், ரமனேஷ் ஆகிய 4 பேருக்கு கல்வித்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி, சின்னகலையம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் 4 பேரிடமும் ரூ.27 லட்சம் பெற்று வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக புகார் அளித்ததின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிரேமலதாவை கைது செய்தனர்.