திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திண்டுக்கல் சரக (பொறுப்பு) டிஐஜி. அபினவ்குமார் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வாகனங்கள் தேனி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 5 வாகனங்கள் என மொத்தம் 33 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.இந்த ஏலத்தில் 31 வாகனங்களை பொதுமக்கள் ஏலத்தில் எடுத்தனர். 2 வாகனங்களை எடுக்கவில்லை