வேடசந்தூர்: ஜி நடுப்பட்டி அருகே நிலை தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த சமையல் மாஸ்டர் பலி
ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஜி நடுப்பட்டியை சேர்ந்தவர் குஞ்சைய்யா (வயது 45). இவர் திண்டுக்கல்லில் ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு மொபெட்டில் நடுப்பட்டி அருகே சென்ற பொழுது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார். காலை வழியாக சென்றவர்கள் பார்த்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.