காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பணியின் போது இறந்த நபருக்கு எழுப்பிடு தொகையை வழங்கினார்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2024 பாராளுமன்ற தேர்தல் பணியின்போது காலமான திரு.பெ.சீனிவாசன் என்பவரின் மனைவி திருமதி. வி.லட்சுமி என்பவருக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் நிவாரண இழப்பீடு தொகை ரூ.15 இலட்சத்திற்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.வே.ராஜ்குமார் உள்ளார்