திருச்சி: தில்லை நகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி தில்லைநகர் நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்து அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென ராமசாமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.